பிரியமான நண்பர்களே..

காட்சி வாசகர்கள் கவனத்திற்கு... காட்சி மறுபடியும் புதிய உத்வேகத்துடன் செயல்பட தீர்மானித்துள்ளது. ஆகவே படைப்பாளிகள் தங்கள் படைப்புகளை அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம் .
நன்றி- காட்சி. kaattchi@gmail.com

January 21, 2013

காட்சியின் கொடை - மாரி செல்வராஜ்

அன்பின் நண்பர்களுக்கு, 

“தாமிரபரணியில் கொல்லப்படாதவர்கள்” சிறுகதை தொகுப்பிற்கு நம் இயக்குநர் ராம் அவர்கள் எழுதிய முன்னுரையிலிருந்து..............

”நகரங்களில் வாழ்ந்த எனக்கு கிராமத்தின் விதிகள் அகப்படுவதாய் இல்லை. நான் வாழ்ந்த நகரங்களில் நீ என்ன சாதி என்று யாரும் கேட்டது இல்லை. யோசித்து பார்க்கையில் நகரம் கிராமத்தை காட்டிலும் பத்திரமானது என்று தோன்றியது. சென்னையில் யாரும் எங்கும் செல்லலாம், யாரும் யாருக்காகவும் பயப்பட வேண்டியதில்லை. கூவம் அழுக்காய் மலமாய் நாற்றத்தோடு ஓடினாலும் தாமிரபரணியை காட்டிலும் புனிதமானது என்று ஏனோ தோன்றுகிறது”







ஆழ் மனதறிந்த எண்ணங்களுக்கு மென்ரகசிய வண்ணங்கள் தீட்டி மாயம் செய்யும் நம் பிரியமிகு எழுத்தாளர் வண்ணதாசன் அவர்கள் எழுதிய முன்னுரையில் இருந்து...

"எனக்கு இப்போது செல்வத்தை தெரியாது. மாரிசெல்வராஜை மட்டுமே தெரியும். கொல்லப்படாதவர்களை தெரிந்துகொள்வது, கொல்லப்பட்டவர்களை தெரிந்துகொள்வதற்குத்தான். நான் தெரிந்துகொண்டேன் நீங்களும் தெரிந்துகொள்வீர்கள்.........."
தெரிந்து கொள்ள செல்லுங்கள் நடந்து கொண்டிருக்கும் புத்தக கண்காட்சியில் வம்சி பதிப்பகத்தின் அங்காடி எண்: 465 மற்றும் 466க்கு. நம் காட்சி இணைய இலக்கிய தளத்தின் வீச்சுக்கு ஒரு மாரி செல்வராஜ் சாட்சி. இந்த வருட புத்தக திருவிழாவில் இவரது முதல் சிறுகதை தொகுப்பான “தாமிரபரணியில் கொல்லப்படாதவர்கள்” வம்சி பதிப்பாக வெளிவருகிறது. விலை ரூ.150/- 

தொடர்பு

படைப்புகள் மற்றும் பின்னூட்டங்களை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி kaattchi@gmail.com