கவிஞர் அறிமுகம்: என்னைப்பற்றி ஒரு சிறு அறிமுகம்." சின்னப்பயல்" என்ற பெயரில் கவிதைகள் மற்றும் சிறுகதைகள் எழுதி வருகிறேன். கணிப்பொறி மேலாளராகப் பணி புரிகிறேன்.அவை "வல்லினம், யூத்ஃபுல் விகடன்,உயிரோசை, கீற்று மற்றும் திண்ணை" இணைய இதழ்களில் வெளியாகியுள்ளன.
கடற்கன்னியின் கால்கள்:
கடற்கரையின் மணல்
சீமைச்சர்க்கரை போலவே
விரிந்து கிடக்கிறது.
இரவுகளில் அவை
நிலவொளியுடன் இணைந்து
இன்னும் இனிக்கும் போலிருக்கிறது
அலைகள் வந்து அடித்தும்
அவை இன்னும் உப்பாகவில்லை.
அதனால் தான் என்னவோ
நண்டுகளும் ,
அலையிலிருந்து
ஒதுங்கிக்கொள்ளும்
சிறிய சிப்பிகளும்,
ஆமைகளும்
கரை தேடி
வந்துதான் வளைகள்
அமைக்கின்றன.
இவை அனைத்தையும்
ரசித்துக்கொண்டே
முடிவற்ற கடற்கரையில்
அமர்ந்து அவள் தன்
கால்களை
நனைத்துக்கொண்டிருந்தாள்
அவை இன்னும்
ஏன் கடற்கன்னியின்
வாலாக மாறவில்லை
என்ற வியப்புடன்
அனைத்தையும்
கவனித்துக் கொண்டிக்கிறேன் நான்....!
- சின்னப்பயல்
கடற்கன்னியின் கால்கள்:
கடற்கரையின் மணல்
சீமைச்சர்க்கரை போலவே
விரிந்து கிடக்கிறது.
இரவுகளில் அவை
நிலவொளியுடன் இணைந்து
இன்னும் இனிக்கும் போலிருக்கிறது
அலைகள் வந்து அடித்தும்
அவை இன்னும் உப்பாகவில்லை.
அதனால் தான் என்னவோ
நண்டுகளும் ,
அலையிலிருந்து
ஒதுங்கிக்கொள்ளும்
சிறிய சிப்பிகளும்,
ஆமைகளும்
கரை தேடி
வந்துதான் வளைகள்
அமைக்கின்றன.
இவை அனைத்தையும்
ரசித்துக்கொண்டே
முடிவற்ற கடற்கரையில்
அமர்ந்து அவள் தன்
கால்களை
நனைத்துக்கொண்டிருந்தாள்
அவை இன்னும்
ஏன் கடற்கன்னியின்
வாலாக மாறவில்லை
என்ற வியப்புடன்
அனைத்தையும்
கவனித்துக் கொண்டிக்கிறேன் நான்....!
- சின்னப்பயல்

