பிரியமான நண்பர்களே..

காட்சி வாசகர்கள் கவனத்திற்கு... காட்சி மறுபடியும் புதிய உத்வேகத்துடன் செயல்பட தீர்மானித்துள்ளது. ஆகவே படைப்பாளிகள் தங்கள் படைப்புகளை அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம் .
நன்றி- காட்சி. kaattchi@gmail.com

September 22, 2011

விழிப்பு - கார்த்திக் நேத்தா


ஒரு வழியாக
நான் பிறந்து விட்டேன் .

பச்சிளங் குழந்தையின்
கண்களைப் போல
என் வாழ்க்கை ஒளிர்ந்து
கொண்டிருப்பதை ரசிக்கிறேன் .


பிசின் சுரக்கும்
இலைகளைப் போல
கறை இல்லாத அன்பு
என்னுள் சுரப்பதை உணர்கிறேன் .

அமைதியின் மேல் விளையாடும்
சிறு பறவையாக மாறி
நான் குதூகலிக்கிறேன் .

சுய ஜீவிய பிரக்ஞை
அழிந்து கொண்டிருப்பதை
அவதானிக்கிறேன் .

ஆண்டனா கம்பி மேல்
அமர்ந்திருக்கும்
காக்கை போல
என் தவறுகளின் மேல் அமர்ந்து
வெளிச்சத்தை
கண்டு கண்டு களிக்கிறேன்.

பாறைக் குடிசையின்
கதவைத் தட்டும்
அலையாகி மிதக்கிறேன்

இப்போதெல்லாம் ,
யாராவது என்னைப்
பார்த்தால் தான்
கண்கள் திறந்து பார்க்கிறேன்.

- கார்த்திக் நேத்தா

தொடர்பு

படைப்புகள் மற்றும் பின்னூட்டங்களை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி kaattchi@gmail.com