கவிஞர் அறிமுகம்: என்னைப்பற்றி ஒரு சிறு அறிமுகம்." சின்னப்பயல்" என்ற பெயரில் கவிதைகள் மற்றும் சிறுகதைகள் எழுதி வருகிறேன். கணிப்பொறி மேலாளராகப் பணி புரிகிறேன்.அவை "வல்லினம், யூத்ஃபுல் விகடன்,உயிரோசை, கீற்று மற்றும் திண்ணை" இணைய இதழ்களில் வெளியாகியுள்ளன.
ஒரு நாள்:
நிறமிழந்து காரை
பெயர்ந்த சுவர்
என்னை முறைத்தது
எப்போதும்
விழுந்து விடும் என்ற
நிலையில்
கதவின் கீல் திருகி
நின்றது
வார் அறுந்த செருப்பு
நடக்கும் போதெல்லாம்
என்னை இழுத்து சென்று
காட்டியது
எனது கண்கள்
ஒரு நகை நட்டு உண்டா
என்ற இல்லாளின்
பார்வையை
விலக்கச்சொன்னது
நேற்று மறந்து போன
பணப்பயிருக்கு இன்று
நீரூற்றிக்கொண்டிருந்த
போது மேற்சொன்ன
இவை யாவும்
நினைவுக்கு வந்தது
அட, இன்னொரு
நாள் கழிந்து விட்டதே
என்று...
- சின்னப்பயல்.
ஒரு நாள்:
நிறமிழந்து காரை
பெயர்ந்த சுவர்
என்னை முறைத்தது
எப்போதும்
விழுந்து விடும் என்ற
நிலையில்
கதவின் கீல் திருகி
நின்றது
வார் அறுந்த செருப்பு
நடக்கும் போதெல்லாம்
என்னை இழுத்து சென்று
காட்டியது
எனது கண்கள்
ஒரு நகை நட்டு உண்டா
என்ற இல்லாளின்
பார்வையை
விலக்கச்சொன்னது
நேற்று மறந்து போன
பணப்பயிருக்கு இன்று
நீரூற்றிக்கொண்டிருந்த
போது மேற்சொன்ன
இவை யாவும்
நினைவுக்கு வந்தது
அட, இன்னொரு
நாள் கழிந்து விட்டதே
என்று...
- சின்னப்பயல்.

