பிரியமான நண்பர்களே..

காட்சி வாசகர்கள் கவனத்திற்கு... காட்சி மறுபடியும் புதிய உத்வேகத்துடன் செயல்பட தீர்மானித்துள்ளது. ஆகவே படைப்பாளிகள் தங்கள் படைப்புகளை அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம் .
நன்றி- காட்சி. kaattchi@gmail.com

June 14, 2011

கணப்பொழுதின் மௌனம் - விக்னேஷ்வரன்

கவிஞர் அறிமுகம் அவரின் எழுத்து வழியே
 சமீப காலமாக வலையில் ஆத்மா என்றும் ரெட்டைவால்ஸ் என்ற பெயரிலும் அறிமுகம்படித்தது மதுரையில் டி.வி.எஸ்ஸிலும் மதுரைக்கல்லூரியிலும்கல்லூரியின் மூன்றாம் வருடத்தில். ஆனந்தவிகடனுக்காக  மாணவப் பத்திரிக்கையாளனாய் கொஞ்சம் சுற்றினேன்பிறகு பிழைப்புக்காக ஆலப்புழையில் ஒரு வருடம். சென்னையில் ஆறாவது வருடம். எல்லா விஷயத்துக்கும் So What? என்ற கேள்வி எழுந்ததாலும் எழுதுவது மிகுந்த சந்தோஷத்தை தருகிறதுஇது வரை யாருமே சொல்லாத ஒரு விஷயத்தை என்றாவது ஒரு நாள் சொல்லிவிடுவேன் எனும் நம்பிக்கையில் எழுத ஆரம்பித்திருக்கிறேன்.
 
கணப்பொழுதின் மௌனம்
 
மிகவும் இரைச்சலாக இருக்கிறது
நொடிப் பொழுதின் மௌனம்
ஒரு சிகெரெட்டை முடிக்கும் பொழுதும்
குழாயை மூடும் பொழுதும்
அழுகையை நிறுத்தும் பொழுதும்
ஒரு காதலை நிராகரிக்கும் பொழுதும்
சட்டென நிகழும் மின்வெட்டின் பொழுதும்
ஒரு கதவை சாத்தும் பொழுதும்
ஒரு நாவலை முடிக்கும் பொழுதும்
எதிரியுடனான ஒரு புன்முறுவலின் பொழுதும்


ப்ரிய நாய்க்குட்டி மடியை விட்டு இறங்கும் பொழுதும்
வேண்டுமென்றே அலை அழைப்பை துண்டிக்கும் பொழுதும்
கண நேர  மௌனம் எனினும் - விதி
பல நூறு டெசிபல்களின் ஆரவாரத்துடன் 
மரணத்தை முத்தமிட்டுத் திரும்புகிறது!

- விக்னேஷ்வரன்.

தொடர்பு

படைப்புகள் மற்றும் பின்னூட்டங்களை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி kaattchi@gmail.com