கவிஞர் அறிமுகம்:
என்னை பற்றிய ஒரு சிறு அறிமுகம் ,பரந்த வெற்றுவெளியில் எனக்கென ஓர் இடம் தேடும் ஓர் சக மனுஷி , ஷம்மி முத்துவேல் என்ற பெயரில் எழுதி வருகிறேன் , எனது வலை பூவிலும் மற்றும் திண்ணை , உயிரோசை , யூத்புல் விகடன் , கீற்று போன்ற இணைய இதழ்களில் எனது கவிதைகள் வெளிவந்துள்ளன.
கருமையின் படிமானம்:
ஒரு கீற்று எழுப்பும் ஒளிகளினுடே
என்னை பற்றிய ஒரு சிறு அறிமுகம் ,பரந்த வெற்றுவெளியில் எனக்கென ஓர் இடம் தேடும் ஓர் சக மனுஷி , ஷம்மி முத்துவேல் என்ற பெயரில் எழுதி வருகிறேன் , எனது வலை பூவிலும் மற்றும் திண்ணை , உயிரோசை , யூத்புல் விகடன் , கீற்று போன்ற இணைய இதழ்களில் எனது கவிதைகள் வெளிவந்துள்ளன.
கருமையின் படிமானம்:
இலைகளின் நுனியோர பனித்துளி
உணர்ந்தே ஒளி வீச
இருளின் கருமை படிந்தே இருக்கும்
மேகக் கூடத்தில் வெள்ளையாய்
முயல், கரடி என உருவகங்கள் செய்து
தன்னிச்சையாய் செயற்படும்
தன்னிச்சையாய் செயற்படும்
ஒன்றுமற்ற வெற்று வெளியில்
கருமை சூழ
வெறித்து இருக்கும் பார்வை ஒட்டலின்றி விலகி
தனித்து நின்றாடுதோர்
தலையாட்டி பொம்மை
அச்சுக் கருமை விலகாமல்...
- ஷம்மி முத்துவேல்

