கவிஞர் அறிமுகம்: நான் - கிருத்திகன் என்கின்ற பெயரில் “ நீயும் நான் ” ”மீளவும்” ஆகிய வலைகளில் எழுதி வருகிறேன். ஈழத்தை சார்ந்தவன். தற்போது மலேசியாவில் பல்லூடகத்துறை பயின்று கொண்டு இருக்கின்றேன்.
என் வீடு:
குருதி படிந்த மண்ணை
என் வீடு:
மரணம் வழியும் சுவர்களை
சன்னம் துளைத்திருக்கிறது.
சன்னம் துளைத்திருக்கிறது.
சதை தெறித்த பிண்டங்களை
உரமாக்கிய பற்றை
முற்றத்தில் நிறைத்திருக்கிறது .
குருதி படிந்த மண்ணை
மரணச்சருகுகள்
போர்த்திருக்கின்றன.
சரீரத்தில் விலகிய ஆத்மாவை போல்கூரையினை வானம் பறித்துக்கொண்டது .
பேய்கள் அலையும் வெளியின்
கல்லறையாய்
பயமூட்டுகின்றது
காலத்தை விழுங்கி சிதைந்த
என் வீடு
கனவுகள் நொதிந்த நிலத்தில்
வளர்ந்திருக்கும் சிலந்தியின் கூடுகளை
கலைக்க மறுக்கின்றன
வலி கனத்த எம் சிறகுகள்...
- கிருத்திகன்.

