இவள் பாரதி எனும் பெயரில் கவிதைகள் எழுதுகிறேன். தற்போது தேவதை இதழில் நிருபராக இருக்கிறேன். இதற்கு முன் ஹலோ பண்பலையில் ‘இவள்‘ எனும் நிகழ்ச்சியின் தயாரிப்பாளராகவும், தொகுப்பாளராகவும், ‘ஸ்பரிசம்’ எனும் இரவு நேர நிகழ்ச்சியின் தயாரிப்பாளராகவும் பணியாற்றினேன். இதுவரை களவு போன கனவு, கணவன் காதலன் தோழன், மற்றும் சில தேன்துளிகளும் எறும்புகளும் எனும் மூன்று கவிதைத் தொகுதிகள் வெளிவந்திருக்கின்றன.
இவரது கவிதைகள் காட்சியில் தொடராக வருகிறது
இவரது கவிதைகள் காட்சியில் தொடராக வருகிறது
மிக துயரமான கவிதை:
சொல்வதை விட
மிக இலகுவான செயல் எதுவுமில்லை..
அன்பை எழுத்துக்களில்
பதிய வைப்பதை போல
மிக துயரமான கவிதை எதுவுமில்லை..
அன்பை புரிந்து கொள்ள
மறுப்பது போல
மிக மோசமான வலி எதுவுமில்லை..
அன்பை தயவு தாட்சண்யமின்றி
மறுதலிப்பது போல
ஒரு பெருஞ்சோகம் எதுவுமில்லை..
அன்பை அது எவ்வளவு ஆழமாயினும்
புறக்கணிப்பது போல
மிகக் கொடிய வேதனை வேறெதுவுமில்லை..
====================
எனக்காக காத்திருத்தாய்
சில நொடிகள்
உனக்காக காத்திருக்கிறேன்
நொடிநொடியாய்..
எனக்காக விழித்திருந்தாய்
சில இரவுகள்
உனக்காக விழித்திருக்கிறேன்
ஒவ்வொரு இரவும்
எனக்காக வாழத் துணியவில்லை
இன்னும் நீ
உனக்காக வாழ்ந்திருக்கிறேன்
மரணத்தின் நெடியிலும...
- இவள்பாரதி.

