பிரியமான நண்பர்களே..

காட்சி வாசகர்கள் கவனத்திற்கு... காட்சி மறுபடியும் புதிய உத்வேகத்துடன் செயல்பட தீர்மானித்துள்ளது. ஆகவே படைப்பாளிகள் தங்கள் படைப்புகளை அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம் .
நன்றி- காட்சி. kaattchi@gmail.com

December 10, 2010

இவள்பாரதி கவிதைகள்-9

இவள் பாரதி எனும் பெயரில் கவிதைகள் எழுதுகிறேன். தற்போது தேவதை இதழில் நிருபராக இருக்கிறேன். இதற்கு முன் ஹலோ பண்பலையில் ‘இவள்‘ எனும் நிகழ்ச்சியின் தயாரிப்பாளராகவும், தொகுப்பாளராகவும், ‘ஸ்பரிசம்’ எனும் இரவு நேர நிகழ்ச்சியின் தயாரிப்பாளராகவும் பணியாற்றினேன். இதுவரை களவு போன கனவு, கணவன் காதலன் தோழன், மற்றும் சில தேன்துளிகளும் எறும்புகளும் எனும் மூன்று கவிதைத் தொகுதிகள் வெளிவந்திருக்கின்றன.

இவரது கவிதைகள் காட்சியில் தொடராக வருகிறது





இப்படி 
இது நடந்தால் 
எப்படி இருக்குமெனும் 
எதிர்பார்ப்புடன் 
செல்லும் போது 
அதற்கு நேர்மாறாக 
நடந்தால் 
அப்படி வலிக்கிறது 
என்பதை 
எப்படி புரிய வைப்பது? 
இப்படி செய்பவர்களுக்கு.. 
============

என்ன நேர்ந்தது உனக்கு 
இப்படி நடுவீதியில் நின்று 
யாரைப் பற்றியும் கவலைப்படாமல் 
கண்ணீரை பொலபொலவென சிந்தி 
பிறருக்கு உற்று கவனித்தாலொழிய 
புரியாத வார்த்தைகளை 
உதிர்த்து கொண்டிருக்கிறாய் 
அந்த தொப்பைவயிறு படைத்தவனிடம்.. 

உன் கண்ணீருக்கு தேற்றும் விதமாய் 
தன் தும்பிக்கையையேனும் 
அசைத்ததா அந்த கடவுள்? 

உன் வார்த்தைகளை செவிமடுத்ததாய் 
தன் முறம் போன்ற காதுகளையேனும் 
விசிறியதா? 

எந்த நம்பிக்கை உன்னை 
அந்த கடவுளிடம் அழைத்து செல்கிறது? 
அதில் சிறு அளவையேனும் 
உன்னிடத்தில் வை.. 

கடவுள் ஒரு யாசகன் 
யாசகன் ஒரு மனிதன் 
மனிதன் ஒரு கடவுள் 

-இவள்பாரதி.

தொடர்பு

படைப்புகள் மற்றும் பின்னூட்டங்களை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி kaattchi@gmail.com