சுமதியின் கவிதைகள் காட்சியில் தொடராக பிரசுரமாகிறது. அவரின் ஏனைய கவிதைகளுக்கு இங்கு சொடுக்கவும்.http://kaattchi.blogspot.com/search/label/சுமதி%20கவிதைகள்
மாலையின் மந்திர ஒளியில்
நிலவின் கசங்கிய இருளில்
விதவிதமான நிறங்களோடு
நீ தானிய வார்த்தைகளை
வீசிகொண்டே இருக்கிறாய்.
ஒருதானியத்திற்கும் மற்றொரு தானியத்திற்கும்
ஆன இடவெளியில்
உன் குரோதமும் என் காதலும்.
காமப்பசி மிகுந்து
பதுங்கி வருகையில்
மறத்தி நீ
கைகளை முறமாக்கி
விரட்டியடிக்கிறாய்
சிறுபொழுதேனும்.
சுமதி.
December 12, 2010
தொடர்பு
படைப்புகள் மற்றும் பின்னூட்டங்களை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி kaattchi@gmail.com
