இவள் பாரதி எனும் பெயரில் கவிதைகள் எழுதுகிறேன். தற்போது தேவதை இதழில் நிருபராக இருக்கிறேன். இதற்கு முன் ஹலோ பண்பலையில் ‘இவள்‘ எனும் நிகழ்ச்சியின் தயாரிப்பாளராகவும், தொகுப்பாளராகவும், ‘ஸ்பரிசம்’ எனும் இரவு நேர நிகழ்ச்சியின் தயாரிப்பாளராகவும் பணியாற்றினேன். இதுவரை களவு போன கனவு, கணவன் காதலன் தோழன், மற்றும் சில தேன்துளிகளும் எறும்புகளும் எனும் மூன்று கவிதைத் தொகுதிகள் வெளிவந்திருக்கின்றன.
இவரது கவிதைகள் காட்சியில் தொடராக வருகிறது.
இவரது கவிதைகள் காட்சியில் தொடராக வருகிறது.
வெறுப்பு
கடந்த சில நாட்களாக
ஏனோ
அவள் வரும் சின்னத் திரை
தொடர்களைப் பாப்பதில்லை..
வார இதழ்களைப்
படிக்கப் பிடிப்பதில்லை..
அவளை நேரில்
சந்தித்ததில்லை..
ஒருமுறை கூட
பேசியதுமில்லை..
அவளுக்கு
என்னைத் தெரியவும்
வாய்ப்பில்லை..
ஆன போதும்
அவள் மேல்
வெறுப்பு வந்து தொலைகிறது
என்னவனை
முன்னர் காதலித்தவள்
அந்த தொலைக்காட்சித் தொகுப்பாளினி
என்றறிந்த நாளிலிருந்து..
இவள்பாரதி.
