சுமதியின் கவிதைகள் காட்சியில் தொடராய் பிரசுரமாகிறது.இவரின் ஏனைய கவிதைகளுக்கு இங்கே சொடுக்கவும்.
பாடைமுதுகு சுளுக்கி
மூச்சுமுட்ட நடக்கும்
இந்த கணங்களை
எங்கு போய் தள்ளுவது?
மரணபயம் வெள்ளையாய் கசிகிறது
கண்கள் வழியாக.
எனக்கு பாடை கட்டுபவர்கள்
யாரென்று தெரிந்து வைத்திருக்கிறேன்
பக்கத்து அறையில்
முகச்சாயம் பூசிக்கொண்டு
எனது இறுதி ஊர்வலத்தில்
நடனமாடக் காத்திருக்கிறார்கள்.
இன்னும் சிறிது நேரத்தில்
பாம்பு பிடாரனின் மகுடிக்கு
ஜீவாலை விடும் நாக்காய்
என் உயிர் தெறித்து விழப்போகிறது.
அடுப்படியில் பலலிட்டர் பால்
ஆவிபறக்க பொங்க போகிறது
அசதியற்ற அழுகைக்காய்..
