பிரியமான நண்பர்களே..

காட்சி வாசகர்கள் கவனத்திற்கு... காட்சி மறுபடியும் புதிய உத்வேகத்துடன் செயல்பட தீர்மானித்துள்ளது. ஆகவே படைப்பாளிகள் தங்கள் படைப்புகளை அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம் .
நன்றி- காட்சி. kaattchi@gmail.com

October 7, 2010

இரண்டு கவிதை - அவனி அரவிந்தன்

ஈரம் காயாத கடற்கரை மணலில்
பதிந்த கால் தடம் போல
என் உள்மனதின் சுவடாக
நீ நிறைந்திருக்கிறாய்,
நான் விரும்பாவிட்டாலும் கூட....!
                             -
பொங்கி நுரைக்கும் பெருங்கடலின்
அடியாழத்து மீன் கூட்டம்
நெளிந்து நீந்தி இசைக்கின்ற
ஏக்கம் நிறைந்த பாடலொன்று
அலையாக மிதந்து
எதிர்பார்ப்பின் துகள்கள் பரப்பிய
கரையின் நீட்சியில்
இலக்கற்று பாவும்
என் துவண்ட கால் விரல்களை
நக்கி ஈரப்படுத்துகிறது...
                -

அவனி அரவிந்தன்

தொடர்பு

படைப்புகள் மற்றும் பின்னூட்டங்களை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி kaattchi@gmail.com