பார்த்தல்
உச்சி வெயிலில் வேம்பு
காற்றிற்கேற்ப அசைகிறது தரையில்.
நிழல்வலை மீறி ஒரு சிறு
பறவையேனும் மேலே
கிளம்புமோ என பார்க்கிறேன்.
பார்த்தலின் நோக்கம் வலையாக
விடுபடத் திணறும் பறவையொன்று
முட்டி மோதுகிறது மனக்குகை இருட்டில்.
சூடான தேனீர் பருகுகிறார்கள்.
சால்வை போர்த்தி உறங்குகிறார்கள்.
ஸகிரா கேட்கிறார்கள்.
பாலு ஏதோ ஒரு இதழுக்கு
கட்டுரை எழுதுகிறார்.
பயணச்சீட்டு எடுக்காததற்காய்
அர்த்தராத்திரியில்
அடுத்த ஸ்டேஷனில்
இறக்கிவிடப்பட இருக்கிற
அந்த முதிய பெண்மணிக்கு
டிக்கெட் எடுக்கலாமா அல்லது
வெளியே குதித்து தற்கொலை
செய்து கொள்ளலாமா என்று
யோசித்துக் கொண்டிருக்கிறேன் நான்.
- முத்துப்பாண்டி
