சைக்கிள் பயில கற்றுத் தந்த
தாத்தாவின் விரல் பிடித்து ,
என் ஞாபகம் நடக்கும்
இந்த வீதி அதே என் பழைய
வீதியாகவே இருக்குமா ?
இந்த வீதி அதே என் பழைய
வீதியாகவே இருக்குமா ?
உடைந்த பம்பர ஓசையை மீட்கிறது .
சிதிலமான திண்ணையிலிருந்து
விலாசுகிறது தேவகியின் சிரிப்போசை .
விலாசுகிறது தேவகியின் சிரிப்போசை .
என்னைக் காவலிருக்க விட்டு
பண்ணையாருக்கு மட்டும் பரத்தையா ன
பரிமளம் கொடுத்த லஞ்ச முத்தம்
காற்றில் உப்புக்கரிக்கிறது .
எலுமிச்சை ஒன்று எனக்குத் தந்து
இரவோடு இரவாகத் தூக்கு
மாட்டிக் கொண்ட பார்வதி ,
மாட்டிக் கொண்ட பார்வதி ,
ஏன் என்னிடம் மட்டும்
எலுமிச்சை தந்தாள் ?
எலுமிச்சை தந்தாள் ?
இப்போதெல்லாம்
எலுமிச்சை என்பது
பழமில்லை எனக்கு .
அது மஞ்சள் மரணம் ,
மரணத்தின் புளிப்பு ,
சுழி உதட்டு பார்வதியின்
சுரோணிதம்.
- கார்த்திக் நேத்தா
