இவள் பாரதி எனும் பெயரில் கவிதைகள் எழுதுகிறேன். தற்போது தேவதை இதழில் நிருபராக இருக்கிறேன். இதற்கு முன் ஹலோ பண்பலையில் ‘இவள்‘ எனும் நிகழ்ச்சியின் தயாரிப்பாளராகவும், தொகுப்பாளராகவும், ‘ஸ்பரிசம்’ எனும் இரவு நேர நிகழ்ச்சியின் தயாரிப்பாளராகவும் பணியாற்றினேன். இதுவரை களவு போன கனவு, கணவன் காதலன் தோழன், மற்றும் சில தேன்துளிகளும் எறும்புகளும் எனும் மூன்று கவிதைத் தொகுதிகள் வெளிவந்திருக்கின்றன.
காட்சியில் இவரது கவிதைகள் தொடராக வரயிருக்கிறது.
ஒவ்வொருமுறையும்
நீ என்னை நேசிக்கிறாயாவென
சந்தேகத்துடன்
கேட்பதில்லை..
சந்தோஷத்துடன் தான்
கேட்கிறேன்..
நீ சொல்லும்
இப்போதைய ஆமோதிப்புகளையும்
மறுதலிப்புகளையும்
மட்டுமல்ல..
முன்னால்
உன்னால்
ஒப்புக்கொள்ளப்பட்ட
எல்லா வார்த்தைகளையும்
சேர்த்தே கணக்கில்
எடுத்துக் கொள்கிறேன்..
ஆயினும் அவ்வப்போது
எனை உயிர்ப்பிப்பது
நீ முன்னர் தூவிய
அந்த ஒற்றை வார்த்தையே
- இவள் பாரதி
