பிரியமான நண்பர்களே..

காட்சி வாசகர்கள் கவனத்திற்கு... காட்சி மறுபடியும் புதிய உத்வேகத்துடன் செயல்பட தீர்மானித்துள்ளது. ஆகவே படைப்பாளிகள் தங்கள் படைப்புகளை அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம் .
நன்றி- காட்சி. kaattchi@gmail.com

May 13, 2010

சுமதி கவிதைகள் 17


சுமதியின் கவிதைகள் காட்சியில் தொடராய் பிரசுரமாகிறது.இவரின் ஏனைய கவிதைகளுக்கு இங்கே சொடுக்கவும்.

கடவுளின் நிஜப்பெயர்

மகேஸ்வரி நகர் பாலவிநாயகர்
கோவில் பிரகாரத்து முருகனுக்கு
தைப்பூசத்திருவிழா.

பால்குடங்களில் ததும்பியது
கிழக்கு வானின் ஒரு நிலா
நூற்றி எட்டாய்.


தென்னங்கீற்றுகள் மட்டும்
அசைய வீசிய காற்றில்
அநியாயத்துக்கு ஆடின
அலங்கரிக்கப்பட்ட
காவடி மயில்கள்.

திருநீற்றுடன் பன்னீரும் மருகும்
மணந்த முன்னிரா வேளையில்
மேளத்துக்கு அதிர்ந்து
குதியாட்டம் போட்டன
எண்ணற்ற ஆண் பாதங்கள்

வாசலில் நிற்க ஆசிர்வதிக்கப்பட்ட
பெண்கள் முன்
முருகன் மயிலேறி போனான்.

ராப்படுக்கையில்
முருகனுக்கு
புதுப்பெயர் ஒன்று வைத்தேன்

”ஆண்களின் குதியாட்டம்” என.

-  சுமதி

தொடர்பு

படைப்புகள் மற்றும் பின்னூட்டங்களை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி kaattchi@gmail.com