கடலில் நீந்துகிறேன் ;
கடலும் நீந்துகிறது .
அலையில் வீழ்கிறேன் ;
அலையும் வீழ்கிறது .
மழையைப் பிடிக்கிறேன் ;
மழையும் பிடிக்கிறது .
கரையில்
குழி பறிக்கிறேன் ;
கரையும் காலடியில்
'கிச்சு கிச்சு ' பறிக்கிறது .
கடலின் தலை மேல்
கரைந்து பறக்கும்
காக்கைப் போல
கரைகிறேன்
அதுவும் கரைந்து விட்டு
மறைந்து போகிறது .
அப்போதிருந்து தான்
அலைகளெல்லாம்
கரைதலாயின- கார்த்திக் நேத்தா.

