இப்போதெல்லாம்
கவிதைகள் வாசிப்பதற்கு
நேரமே இருப்பதில்லை
ஒரு கவிதையில்
முதல் வரியையும்
மற்றொரு கவிதையில்
மூன்றாம் வரியையும் வாசிக்கிறேன்
மீந்து போன கவிதைவரிகள்
வாலாட்டியபடியே என்னை
துரத்திக் கொண்டிருக்கின்றன
ஒருவேளை அவற்றை
அடிமாற்றிப் போட்டு
பின்னொருநாள்
புதிய கவிதையொன்றை
நான் சமைக்கக்கூடும்...
~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~
எண்ணிலடங்கா நட்சத்திரங்களே
இட்டு நிரப்ப முடியாத இருளை
மாடத்திலிருக்கும்
மண்விளக்கொன்று நிறைக்க முயன்று
தோற்றுக்கொண்டிருக்கிறது...
~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~
வெட்க உணர்வற்று
ஆடை கிழித்து
அம்மண உடம்பில்
கழிவுகளைப் பூசிய பெண் போல
கோர மௌனத்துடன்
தகித்து அலைகிறது
வற்றிப்போன வைகை...
~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~
திரித்த நூலை எரித்தபடி
இரக்கமில்லாமல் சிரிக்கிறது
கண்ணாடிச் சிறைக்குள்ளிருந்து
ஒரு சிமிழ் விளக்கு
- அவனி அரவிந்தன்

