கவிஞர் அறிமுகம்: M.ராஜா என்றெனக்கு பெயர். சொந்த ஊர் ஈரோடு மாவட்டத்திலுள்ள காங்கயம். தொழில் நிமித்தம் சென்னையில் மருத்துவராக பணிபுரிகிறேன். பிரத்தியேக வலைப்பதிவிலும் எழுதிவருகிறேன். எழுதியவற்றுள் சில உயிரோசை, திண்ணை போன்ற இணைய இதழ்களில் வெளியாகியிருக்கின்றன.
இவரது கவிதைகள் காட்சியில் தொடராக வருகிறது.
எங்கும் நீக்கமற:
துடைத்துக் கவிழ்த்த தேநீர்க் கோப்பையில்
இன்னமும் தேங்கியிருக்கிறது
இறந்த காலத்தின் சுவை ஒன்று
காலியான தண்ணீர்க் குடுவையிலும்
ஒட்டிக்கொண்டு இருக்கின்றன
சில ஈரத் துளிகள்....
ஒரு வெற்றுத் தாளில் வாசிக்கப்படுகிறது
அடர்மௌனத்தின் நீள்வாக்கியம்
யாருமற்ற வீட்டை சுற்றி வருகின்றன
அமானுஷ்யங்களின் நிழல்கள்
நிஜத்தில்
எந்த வெற்றிடமும் காலியாக இருப்பதில்லை...
- எம்.ராஜா
இவரது கவிதைகள் காட்சியில் தொடராக வருகிறது.
எங்கும் நீக்கமற:
துடைத்துக் கவிழ்த்த தேநீர்க் கோப்பையில்
இன்னமும் தேங்கியிருக்கிறது
இறந்த காலத்தின் சுவை ஒன்று
காலியான தண்ணீர்க் குடுவையிலும்
ஒட்டிக்கொண்டு இருக்கின்றன
சில ஈரத் துளிகள்....
ஒரு வெற்றுத் தாளில் வாசிக்கப்படுகிறது
அடர்மௌனத்தின் நீள்வாக்கியம்
யாருமற்ற வீட்டை சுற்றி வருகின்றன
அமானுஷ்யங்களின் நிழல்கள்
நிஜத்தில்
எந்த வெற்றிடமும் காலியாக இருப்பதில்லை...
- எம்.ராஜா

