December 14, 2010
புத்தமரம் - கார்த்திக் நேத்தா
வீழும் இலை
குளத்திற்கு மாட்டி விடுகிறது
வளையல்.
நீரின் சலனம் கேட்டு
துணுக்குறுவதில்லை பறவைகள் ,
த்யானானுபவம் அடைகின்றன.
கறுப்பாகிக் கொண்டிருக்கும்
குளத்தின் மேல் பைய ஊர்கிறது
நிலா வெளிச்சமெனும் மின்மினி உருண்டை.
தியானத்தில் இருந்ததாக பிதற்றிய புத்தன்
உண்மையில் தியானத்தில் தான் இருந்தானா ?
அரச மரம் மட்டுமே போதி மரம்
புத்தனாக இருந்தால்.
எல்லா மரங்களும் போதி மரங்களே
பறவையாக இருந்தால்.
Labels:
கவிதை,
கார்த்திக் நேத்தா கவிதைகள்
தொடர்பு
படைப்புகள் மற்றும் பின்னூட்டங்களை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி kaattchi@gmail.com

