இவரது கவிதைகள் காட்சியில் தொடராக வருகிறது.
கையேந்தி நிற்கும்
கரங்களைக் காணச் சகியாமல்
பார்வையைத் திருப்பும் மௌனம்
ஓங்கியழும் குரல்களைக்
கேட்க முடியாமல்
காதுகளை மூடிக் கொள்ளும் மௌனம்
அண்டை வீடு
கதவைத் தாளிட்டுக் கொள்ளும் மௌனம்
தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கிடையே
‘20,000 பேர் பரிதவிப்பு’ என ஓடும் செய்திகளைக்
கண்டும் காணாத மௌனம்
ஆயிரமாடிரம் மௌனங்களைச்
சூடிக் கொண்டிருக்கும்
அத்துனை பேருக்கும் சொல்கிறேன்
மௌனம் சம்மதத்தின் வெளிப்பாடல்ல
அது கோழையின் வீரச்செயல்..
வேதனைகளை
வேடிக்கை பார்க்கும் மௌனமே
வெடித்தெழு
சாவதற்குள் ஒருமுறையேனும்..
வரலாறு கூறும்
பழிச்சொற்களில்
ஒன்றிரண்டு குறையக்கூடும்
உன் சந்ததிக்கு..
--இவள்பாரதி
