பிரியமான நண்பர்களே..

காட்சி வாசகர்கள் கவனத்திற்கு... காட்சி மறுபடியும் புதிய உத்வேகத்துடன் செயல்பட தீர்மானித்துள்ளது. ஆகவே படைப்பாளிகள் தங்கள் படைப்புகளை அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம் .
நன்றி- காட்சி. kaattchi@gmail.com

October 2, 2010

கார்த்திக் நேத்தா கவிதைகள் -11


உடன்போக்கு

ரயிலின்  இந்த நீண்ட  கூவலே
ஊருக்கு உரைக்க ,
நம் உடன்போக்கின் தபால் .
கண்ணாடியில் உன் பொட்டு

பெற்றோரை காயப்படுத்தட்டும் .
புகார்களற்ற நேசம் தொடரட்டும் .


குறை பொறுக்கும் பக்குவத்தை
இன்றிலிருந்து பழகலாம் .
வாழத் தூண்டும் ஊடலை
நீ நிகழ்த்து
இந்த ரயிலின் ஓசை தேயும் வரை
அல்லது
அடுத்த ரயிலின் ஒலி கேட்கும் வரை .

பூனையின் கோபம் போன்ற
உனது காமத்தினின்று நீயும்
காக்கையின் கரைதல் போன்ற
கோரிக்கையினின்று நானும்
வெகு தூரம் போவோம் .
கடலில் நட்சத்திரம் விழிப்பதை
வியப்புறுவோம் .

உடன்போக்கின் கண்
இடைசுரத்து பசி மீறட்டும்.
பாலை எங்கும் பெருகட்டும்
ப்ரேமையின் பால் .
கள்ளியில் பூக்கட்டும்
கானுறையாத ஆணுறை .
நம் அக்கண
கண்ணீர்த்துளி
காமமன்றி வேறில்லை சகி .

- கார்த்திக் நேத்தா.

தொடர்பு

படைப்புகள் மற்றும் பின்னூட்டங்களை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி kaattchi@gmail.com