1.
வெய்யில் உறையும்
வெய்யில் உறையும்
உவர்ப்புக் கடலாக நீயிருக்கையில்
உன் கைகள் குவிந்த நீரில் துள்ளும்
ஒற்றை மீனாகவே நானிருக்கிறேன்...
கரை தட்டிய எனது பிடிமானத்தில்
அழுந்தப் பதிந்த
பழுப்பு நிற கால் நகங்கள் மீது
அதே வண்ணத்திலான தன் அலகை
கூர் தீட்டிய கடற்குருவி
சிறு வெட்கத்துடன்
ஒரு முத்தத்தை உதிர்த்து விட்டு
நிலம் சூழ் தீவான கடலை
அளப்பதாக பறந்து சென்றது
உப்புக் காற்றில் மிதந்த அதன் பாதி முத்தமும்
பதிலுக்கு நான் வீசிய
எச்சில் படிந்த என் மீதி முத்தமும்
நடுக்கடல் சுழலின் மேற்பரப்பில்
இன்னமும் சுற்றிக் கொண்டே இருக்கின்றன...
-அவனி அரவிந்தன்
-அவனி அரவிந்தன்
