இவள் பாரதி எனும் பெயரில் கவிதைகள் எழுதுகிறேன். தற்போது தேவதை இதழில் நிருபராக இருக்கிறேன். இதற்கு முன் ஹலோ பண்பலையில் ‘இவள்‘ எனும் நிகழ்ச்சியின் தயாரிப்பாளராகவும், தொகுப்பாளராகவும், ‘ஸ்பரிசம்’ எனும் இரவு நேர நிகழ்ச்சியின் தயாரிப்பாளராகவும் பணியாற்றினேன். இதுவரை களவு போன கனவு, கணவன் காதலன் தோழன், மற்றும் சில தேன்துளிகளும் எறும்புகளும் எனும் மூன்று கவிதைத் தொகுதிகள் வெளிவந்திருக்கின்றன.
காட்சியில் இவரது கவிதைகள் தொடராக வரயிருக்கிறது.
காட்சியில் இவரது கவிதைகள் தொடராக வரயிருக்கிறது.
இவளும் இவனும்
தொலைபேசியில்
நீயும் நானும்
மணிக்கணக்காகப் பேசிய
பேச்சுக்கள்
இனி குறைந்து போகலாம்..
இன்று என்ன உடை
அணிந்திருக்கிறாயென
இருவரும் கேட்டுக் கொள்ளும்
வாய்ப்பில்லாமல் போகலாம்..
என்ன சாப்பிட்டாயென
உணவுவேளை தோறும்
விசாரிக்கும் நிலை
வேறாகலாம்..
எப்போது
சந்திப்போமென
அதி ஆவலுடன்
காத்திருந்த
வலியும் சுகமும் மாறிப் போகலாம்..
ஒற்றைக் காட்சியை
நீ வேறிடத்திலும்
நான் வேறிடத்திலும்
நின்று சிலாகித்த
சிலீர் அனுபவங்களின்
களம் மாறலாம்..
உன் வீட்டில் நீயும்
என் வீட்டில் நானும்
தனித்திருக்கையில்
நமக்கிடையே நிகழ்ந்த
சந்தோஷங்கள் வேறாய் மாறாலாம்..
வலிகள் சந்தோஷமாய் மாறலாம்..
இன்னும் சில நாட்களில்
நிகழவிருக்கும் நமது
திருமணத்திற்கு பிறகு..
- இவள் பாரதி
- இவள் பாரதி
