பிரியமான நண்பர்களே..

காட்சி வாசகர்கள் கவனத்திற்கு... காட்சி மறுபடியும் புதிய உத்வேகத்துடன் செயல்பட தீர்மானித்துள்ளது. ஆகவே படைப்பாளிகள் தங்கள் படைப்புகளை அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம் .
நன்றி- காட்சி. kaattchi@gmail.com

June 27, 2010

கார்த்திக் நேத்தா கவிதைகள் - 1


நான் கார்த்திக் நேத்தாசேலம் மாவட்டம்சின்னனூர் கிராமம்.  திரைத் துறையில் பாடலாசிரியராக வளர்ந்து வருகிறேன்

இவருடைய கவிதைகள் காட்சியில் தொடராய் வெளிவருகின்றன.

கிராபைட் வெளி

எண்பது பக்க நோட்டில்
ஆளுக்குப்  பாதி பாதி பக்கங்கள்
என்று  தீர்மானித்துக் கொண்டோம் .
நீயொரு கத்தரிக்காயை
பூசணிக்காய் அளவு வரைந்தாய் .
நான் தக்காளிக்கு மஞ்சள் நிறம் தீட்டி
உருளைக்கிழங்கு ஆக்கினேன் .
நீயொரு பென்சில் வரைந்து ,
'என் ரப்பர் பென்சிலையே அழிக்கும்'
என்று அழித்தாய் .
நான் வரஸ்ரீ டீச்சரை வரைந்து ,
பிரம்பால் அடித்தேன் .
 நீ உன் பங்குக்கு டீச்சரை
முட்டி போட  வைத்தாய் .
நானொரு பறவை வரைந்து
பறக்கவிட்டேன் .
நீ வானம் வரைந்து வேலி
கட்டிக்கொண்டாய் .
நான் அம்மாவை வரைந்து
கோல் மூட்டினேன் .
நீ அம்மாவின் மடியில் விசும்பி
தூங்கும் உன்னை வரைந்தாய் .
நான் எண்பது பக்க நோட்டை வரைந்து
நம் இருவரின் பெயரையும் எழுதி வைத்தேன் .
நீ பழம் விட்டாய் . நானும் விட்டேன் .
 
- கார்த்திக் நேத்தா  
 



தொடர்பு

படைப்புகள் மற்றும் பின்னூட்டங்களை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி kaattchi@gmail.com