திரு.ராம் அவர்களின் ( கற்றது தமிழ் பட இயக்குனர்) வலைத்தளத்தளமான “காட்சி” யில் வரும் யமுனா ராகவேந்திரனின் - அற்றவைகளால் நிரம்பியவள்- என்ற தொடர்.
அற்புதமான,தனக்கென்று பிரத்தியேகமான நடையில் கதை சொல்லும் யமுனா ராகவன் அவர்கள் ஒரு மருத்துவர்.மருத்துவருக்கு தனது துறை சார்ந்த விஷயங்களை படிப்பதற்கே போதுமான நேரம் இல்லாத போது இது போன்ற ஒரு தொடர்கதை எழுதுபவரை பார்க்கையில் மிகுந்த ஆச்சரியமாக இருக்கிறது. இவருடைய கதைகளுக்கிடையில் வரும் தகவல்களைக் கண்ணுறும்போது நிச்சயம் இவர் ஒரு தீவிரமான வாசிப்புத்தளத்தைச் சேர்ந்தவர் என்பதில் ஐயமில்லை.
கதை சொல்லியின் நடை ,உத்தி மற்றும் கதைகளுக்கிடையில் அவர் எடுத்தாளும் விஷயங்களின் கனம் ஆகியவற்றை வைத்துப் பார்க்கையில் , இவர் சாதரன கதைசொல்லியாகயில்லாமல் ஒரு தேர்ந்த படைப்பாளி -யென்றே நான் கருதுகிறேன்.அற்புதமான,தனக்கென்று பிரத்தியேகமான நடையில் கதை சொல்லும் யமுனா ராகவன் அவர்கள் ஒரு மருத்துவர்.மருத்துவருக்கு தனது துறை சார்ந்த விஷயங்களை படிப்பதற்கே போதுமான நேரம் இல்லாத போது இது போன்ற ஒரு தொடர்கதை எழுதுபவரை பார்க்கையில் மிகுந்த ஆச்சரியமாக இருக்கிறது. இவருடைய கதைகளுக்கிடையில் வரும் தகவல்களைக் கண்ணுறும்போது நிச்சயம் இவர் ஒரு தீவிரமான வாசிப்புத்தளத்தைச் சேர்ந்தவர் என்பதில் ஐயமில்லை.
ஒரு புனைவை உண்மையென நம்பும்படியாகவும்,ஒரு உண்மையை புனைவென நம்பும்படியாகவும் எழுதும் வெகு சில எழுத்தாளர்களில் ( நாஞ்சில் நாடன்,யுவன் சந்திரசேகர்) நான் யமுனா ராகவேந்திரனையும் இணைத்துக்கொள்கிறேன்.
ஜெயமோகனைப் போல இவருடைய கதைகளும் தகவல்களால் நிரம்பியது (informations). பயனுள்ள தகவல்களே. மருத்துவ துறையைப் பற்றிய இவருடைய தகவல்கள் ஒரு சமயம் அதிர்ச்சிக்குரியதாகவும், ஆச்சரியத்-திற்குரியதாகவும் சில சமயங்களில் வேதனைக்குரியதாகவும் உள்ளது.
ஒரு சாதாரன மனிதனாகவும்,ஒரு மருத்துவராகவும்,ஒரு பெண்ணாகவும் மான மனநிலைகளை அவர் பதிவுசெய்யுமிடத்திலும் சரி,அந்த தோற்றங்கள், ஒவ்வொருப் பிரச்சனையை எதிர்கொள்ளும் போது எவ்வாறு மாற்றம் பெறுகிறது என்று பதிவு செய்யுமிடத்திலும் சரி அவருடைய எழுத்து முற்றிலும் ஒரு புதிய கோணம் பெறுகிறது.
நல்ல வாசிப்பிற்கான தேடல் உள்ளவர்கள் தவறவிடக்கூடாத எழுத்தாளர் இவர்.
- சு.சிவக்குமார் அவரது வலைப்பூவில் இப்பதிவை இட்டுள்ளார்.அதைக் காண இங்கே சொடுக்கவும்
