
போன வாரம் பொன் நிற விஸ்கியின்
துணைக்கு சேர்த்த நொறுக்கல்களை சுமந்த
கறுப்பு பாலித்தீனின் சன்னமான
அசைவையும் நாடகத்தொனியாக்கும் சப்தம்,
எங்கோ இயங்கும் மழலையர் பள்ளியின்
மங்கிப்போன குழந்தைகளின் கூட்டுச்சப்தம்.
காற்றைத் தட்டிப் பிரித்து தடதடக்கிற
தலைக்கு மேலான காற்றாடியின் சப்தம்.
அனுப்பாமல் விடப்பட்ட கடிதம்மோ,
எழுதி முடிக்காத கதையோ,
வங்கியில் இடப்படாத காசோலையோ,
என் அந்தரங்கம் தடவிய
குறிப்புகளில் இருந்து தப்பியதோ,
விஸ்பர் ரை பொதிந்து வந்த தாளோ
என எதுவாக
வேண்டுமானலும் அத்தாள் இருக்கலாம்.
மரமேசைக்கு அடியிலோ அறையில் சிதறிக்கிடக்கும்
சம்பந்தம்மற்ற பொருட்களுக்கு அடியிலோ
அது சதா பேசும் சப்தம்.
என எல்லாம்
பெரும் குரலெடுத்துச் சொல்கிறது
செத்தப் பின்னும் செவிக்குக் கேக்கும் என.
ராம்-
